எமது பெரு விரல் தவிர்ந்த கை விரல்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு மூட்டுக்கள் (மொளிகள்) உள்ளன. இவை அசைவதின் மூலமே எமது விரல்களை மடக்கவும் விரிக்கவும் முடிகிறது. பொருட்களைப் பற்றிப் பிடிக்க இவை அவசியமானவையாகும்.
இவற்றை
இதில் கடைசியாக உள்ள
இந்த மூட்டில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே ஹெர்படன்ஸ் நோட் தோன்றுகிறது.
ஹெர்படன்ஸ் நோட் ஒருவருக்கு இருந்தால் அவரது பிள்ளைகளிலும் வரக் கூடிய சாத்தியம் உண்டு.
பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதிலும் ஆண்களை விட பெண்களில் அதிகம்.
ஹெர்படன்ஸ் நோட் என்பது ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் (Osteoarthritis) என்ற ஒரு வகை மூட்டு நோயின் அறிகுறியாகும்.
ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் வயதாகும்போது மூட்டுகளின் தேய்மானத்தால் ஏற்படும் நோய் இதுவெனப் பல காலம் கருதப்பட்டது.
அது உண்மைதான். ஆயினும் அதற்கு மேலாக எலும்பை மாத்திரமின்றி, அதைச் சுற்றியிருக்கும் குருத்தெலும்பு, சைனோவியம் எனப்படும் சவ்வு, சுற்றியிருக்கும் தசைநார்கள் என பலவற்றையும் தாக்கும் ஒரு நோயாக இருக்கிறது.
ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் சில அறிகுறிகள்
ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் உள்ளவர்களில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும், அது முக்கியமாக இடுப்பு எலும்பு, முழங்கால், பெருவில் ஆகியவற்றையே அதிகம் தாக்குகிறது.
- மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கம் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் தோன்றும்.
- அவற்றின் உள்ளே நீர் சுரக்கக் கூடும். நாட் செல்ல,
- அவற்றை ஆட்டும்போது மூட்டுகளினுள்ளே கொ கொர எனச் சத்தம் எழுவதுண்டு.
எடை அதிகரிக்கும்போது முக்கியமாக முழங்கால், இடுப்பு மூட்டுகளில் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.
மாறாக நோயுள்ளவர்கள் தமது எடையைக் குறைத்தால் நோயின் தாக்கம் குறையும்.
நடப்பதற்கு சிரமம் உள்ளவர்கள் நோயுள்ள பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் கைத்தடி பிடித்து நடப்பது நோய் மேலும் தீவிரம் அடைவதைக் குறைக்கும்.
முழங்காலில் ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் இருப்பவர்கள் நடப்பதும், இடுப்பெலும்பு, அடி முதுகு ஆகியவற்றில் இருப்பவர்கள் நீந்துவதும் நல்ல பயிற்சியாகும்.
ஆயினும் கழுத்தெலும்பு வலி உள்ளவர்களுக்கு நீச்சல் நோயை அதிகரிக்கலாம்.
மருத்துவம்
- நோயினால் மூட்டுகளில் ஏற்படும் வலியைத் தணிக்க சாதாரண பரசிட்டமோல் மாத்திரைகள் போதுமானதாகும்.
- கடுமையான வலிநிவாரணிகள் தேவைப்படாது.
- வலிநிவாரணி ஜெல் மருந்துகளை நோயுள்ள மூட்டுகளின் மேல் பூசுவது வலியைத் தணிக்க உதவும். பூச்சு மருந்தாக வெளியே பூசுவதால் வயிற்று எரிவு, பிரஸர் அதிகரித்தல் போன்ற பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.
நான் எழுதி வார வீரகேசரியில் 17.10.2010 வெளிவந்த கட்டுரையின் மீள் பிரசுரம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0




6 comments:
நல்ல பயனுள்ள பதிவு Dr .. இருந்தாலும் வந்து பாக்க கொஞ்சம் பயமா இருக்கு! :)
மருத்துவ தகவலுக்கு நன்றி டாக்டர்.
மிகவும் பயனுள்ள தகவல் . தங்களுக்கு என் நன்றிகள்.
ஒரு கேள்வி ..டாக்டர்
இரவில் மூன்று நான்கு வகை மருந்துகள் எடுப்பவர் ஒரு மருந்துக்கும்
மற்றைய மருந்துக்கும் எவ்வளவு நேரம் இடை வேளை இருக்கவேண்டும்.?
வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி ஜீ, சைவகொத்துப்பரோட்டா.
நிலாமதி said "இரவில் மூன்று நான்கு வகை மருந்துகள் எடுப்பவர் ஒரு மருந்துக்கும்
மற்றைய மருந்துக்கும் எவ்வளவு நேரம் இடை வேளை இருக்கவேண்டும்.?"
பல மருந்துகள் சேர்த்து எடுக்கக் கூடியதாக இருக்கும் ஆனால் சிலவற்றிற்கு இடையில் Interactions இருக்கக் கூடும். எனவே மருத்துவருடன் கேட்டுச் செய்வதே உசிதம்.
nalla thagaval.thanks
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி gunsaselvam
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்